அதிகாலை பெருமழையில்
முற்றத்து முல்லை அரும்புகள்
தன் இதழ்களிலிருந்தும்
நீர்த் துளிகளைக் சொட்டிக் கொண்டிருக்கின்றன
.
தெப்பம் போல
நீரில் மிதக்கிறது
உனது உருவம்
.
காகங்கள்
வீடுதோறும் அமர்ந்து கரைகின்றன
.
மலர்ந்திருக்கும்
முல்லைப் பூக்களைச் சூடிக்கொள்வதற்கு
நீ
இன்னமும் வரவில்லை
.
துளிநீரை
தன் இதழ்களில் ஏந்தி
மொட்டவிழும் அரும்புகளின் வாசனை
உன்னை
என் பிரபஞ்சவெளியெங்கும்
பரவச் செய்துகொண்டிருக்கிறது – முன்பு பாலகுமாரணின் வரிகளை சுவாசித்த அதே ஞாபகம் . நல்ல உணர்வு பூர்வமான வரிகள்
This poem s filled with the fragrance of flowers with tiny rainy drops touching us with a touch of tender love..Wonderful feeling on love..theppam on water , a divine thought on love.. this poem, மொட்டவிழும் அரும்புகளின் வாசனை…
//துளிநீரை
தன் இதழ்களில் ஏந்தி
மொட்டவிழும் அரும்புகளின் வாசனை
உங்களை உங்கள் கவிதை வெளியெங்கும்
பரவச்செய்துகொண்டிருக்கிறது.