மேகங்கள் உரசிக் கொள்ளும்போது

நாங்கள்
வேறு வேறு திசைகளில் பயணிப்பவர்கள்
.
சிலபோது  எதிரெதிரே கடந்து செல்வோம்
எங்களை நாங்கள் பார்த்தவாறு
.
அவன் கண்களில் மின்னல் பூக்கும்
என் கண்கள் அதைத் தாங்கித் கொள்ளும்
.
மீண்டும்
நாங்கள் எதிர் கொள்கையில்
என் கண்களில் மின்னல் பூக்கும்
.
அவனால் தாங்கவே இயலாது
………………………………………………………………………………………..சக்திஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to மேகங்கள் உரசிக் கொள்ளும்போது

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ஈருடல் ஓருயிர் என்பதால்.. ‘எங்களை நாங்கள்…’—
    இரு மேகம் இரு மின்னல்..
    முதல் மின்னல் , இரண்டாவது மின்னலுடன் சேர்ந்து கொள்வதால்..
    அவனால் தாங்கவே இயலாது.–
    கவிதை, மின்னல்பூக்கள் என பளிச்..பளிச்..

  3. balasubramanian சொல்கிறார்:

    nice

பின்னூட்டமொன்றை இடுக