அலைபேசியில் குரல்களாய்
அடைகின்ற
பறவைகள்
முகம் திருப்பிப் பறக்கின்றன
தொலைவிடம் நோக்கி
.
ஏதுமறியாத
சிட்டுக்குருவியின் இதயத்தில்
படர்ந்திருக்கிறது
மின்பதற்றம்
.
பேசிக்கொண்டிருந்தோம்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பறவைகள் பற்றியும்
.
காதலும்
வெறுப்பும்
பிரிவும்
காமமும்
கட்டளைகளுமென
முகம்கொண்ட வார்த்தைகள்
மின் வார்த்தைகளாகின்றன
.
ஒருவரிடமிருந்து
ஒருவருக்கு
பின்னும்
பலருக்கும்
.
வெளியில்
மிதந்து கலைகிறது
.
சிட்டுக்குருவிகள்
சிட்டுக்குருவிகள்
அமர்ந்து பேசவியலாத
ஆகாயத்தில்
சிவப்பு வண்ணம்
படர்ந்திருக்கிறது.
……………………………………………………………………………………சக்தி ஜோதி
so peples are polluting the envoirment byuseless talk
என்ன ஒரு சுற்றுப்புற சுழல ஆர்வம்..மனித உணர்வுகள், மின் உணர்வுகள் என மாற்றம் கொண்டு —, ”கிச் கிச் ” என்று அன்பு வார்த்தைகள் மூலம் தன் காதலை வெளிபடுத்தும் குருவிகளின் வாழ்வை….நம் உணர்வை தெரிவிக்க , சிட்டு குருவிகளின் உயிர் ….தன் உயிர் கொடுத்து . மானிட உணர்வை சுமந்து சென்று சிட்டென தன் உயிரை பணயம் வைக்கும் , சிட்டு குருவிகளின் அன்புக்கு , என்ன ..? இறுதி வரிகள் , மானிட மனதை பிசய செய்கின்றது..அலைபேசி அளவை குறைப்போம் ..சிட்டு குருவிகளின் சிங்கார விளையாட்டை …’காக்கை குருவி எங்கள் ஜாதி”–கவிதை , கசிய வைக்கும் வார்த்தைகள் கொண்டு ….
வார்த்தைகள் = சொற்கள்
ஆகாயம் = வானம்
என்று வடமொழி தவிர்த்தால் பாடல் இன்னும் மென்மை பெறும்.
வாழ்த்துக்கள் உங்கள் தமிழ்ச்சேவைக்கு.
வணக்கம் உங்கள் குமுகாய சேவைகளுக்கு.
நன்றிவுடன்
நாஞ்சில் பீற்றர்
http://www.fetna.org
அருமை.
வாழ்த்துகள்.
வலிக்கிறது சக்திஜோதி.
இந்த வலி எதில் மோதிக்கொண்டோம் என்று தெரியாது மோதிக்கொண்ட வலிஅல்ல.