.
.
நிலாவென
நான்
ஒளிர்வதாகக் கூறுகிறாய்
சூரியனாய் இருந்து கொண்டு
.
என்
நினைவின் அடுக்குகளில்
எத்தனையோ கதைகள்
பொதிந்துள்ளன
நிலா இரவுகள்
அன்று இருந்தது போல்
இல்லை
.
பால்யம்
கடந்த இந்த இரவுகளில்
.
பாட்டிகளின்
மரபில்
வந்து போன இளவரசனாய்
.
ஏழு குதிரைகளில்
நீ
வருகையில்
.
சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்
.
நிலா ஒளிரும் பொழுதிலும் .
அருமை.
வாழ்த்துகள்.
சூர்யன் உயிர்ப்பை உலகிற்கு அளித்தாலும் , நாம் விரும்புவது நிலவின் குளிரைதான் ..இரவின் வலிமை தான் , மறு நாள் சூர்ய வெளிச்சத்தில் நாம் உழைக்க ஏதுவாகின்றது ..பாட்டி சொன்ன கதைகள் என்றும் உயிரோட்டம் உள்ளது ..கற்பனை குதிரைகளின் பாய்ச்சல் அது ..பால்யம் கடந்த இரவுகள் அறிவின் முதிர்ச்சி என்று சொல்லி கொள்ளும் இரவுகள்(!) (?)..நிலா ஒளிர்ந்தாலும் , எழு குதிரைகளில் வருவது சூர்யன்தான் ..அப்பொழுது , இயற்கை , சூர்ய காந்தி மலரை அற்புதமாக இதழ் விரிக்க செய்யும்..கவிதை, நிலவின் குளிர்ச்சி உள்ள சூர்யன் ..
like this
நீதான் என் ஒளிர்விர்க்கும் ,மலர்விர்க்கும், காரணம் என்பதை இப்படியும் சொல்ல முடியுமா ? கவிஞரே !!!!!!
உண்மைதான் நிலா இரவுகள் அன்று இருந்தது போல் இன்று இல்லை. என் பால்ய நாட்களில் தொலைக்காட்சிகள் இல்லை.நானும், அம்மாவும், அப்பாவும் மொட்டை மாடியில் அமர்ந்து, கதைகளோடும், பேச்சோடும் சாப்பிட்டதும் அப்படியே உரங்கிப்போனதும், நினைவிரங்கி வருகிறது. மொட்டை மாடிக் கனவுகள் , நிலவோடும், நட்சத்திரங்களுடனுமாய் இன்னும் மனதில் மின்னிக்கொண்டிருக்கிறது.. உங்கள் கவிதை என் பால்யத்தின் வானில் சில மின்னல்களை வீசி நினைவு வெளிச்சங்களை ஒளிரவிட்டது. நன்றி தோழர் சக்தி.