தவம்

இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும்
அல்லது நான்
இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும்
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள்
.
காலம் பற்றி
உன்னை விட நான் நன்கறிவேன்
.
காலம் சமரசமற்றது
மேலும்
அதனிடம் பேரம் பேச இயலாது
.
நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு
இத்தனை காலமாக
.
நான் அடைந்தேன்
அடைந்தேனா என்று தெரியவில்லை
.
அப்பொழுது
அது என்னைக் கடந்திருந்தது
.
எனக்குக் காத்திருக்கவும் தெரியும்.
……………………………………………………………………………………………சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தவம்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. g.mohanamoorthy சொல்கிறார்:

    kaala idaiveliku pin kaalathai patriya oru kavithai. super

  3. Pandiyan.G சொல்கிறார்:

    super

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அடையும் வரை காத்திருந்து ,தவம் செய்வது என்பது மனதிற்குள் பூ பூக்கும் தருணம் வரை … ரம்ய வாசம் வசமாகும் பொழுது, மனசு பட்டாம்பூச்சி ….
    தவம் சுகமானது

  5. காலம் சமரசமற்றது
    மேலும்
    அதனிடம் பேரம் பேச இயலாது\\
    அருமையான வரிகள்.

  6. kaviri nathi சொல்கிறார்:

    தவம் அருமை

பின்னூட்டமொன்றை இடுக