பரிமளத் தைலம்

ஒவ்வொரு நாளும்
நான் சிலுவையில் அறையப்படுகிறேன்
ஒவ்வொரு மூன்றாம் நாளிலும்
நான்
உயிர்த் தெழவேயில்லை
என் உடலிருந்து குருதி வழிகிறது
என் உடல் வலியால் துடிக்கிறது
ஒவ்வொரு மூன்றாம் நாளும்
எனக்கு ஏமாற்றதைப் பரிசளிக்கின்ற
பின்னும் ஒருநாளில்
என்னை மாய்த்துகொள்ள முயற்சித்த
மூன்றாவது நாள்
ஈஸ்டராக விடிந்தது.
…………………………………………………………..சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக